சிவபெருமாள் எழுந்தருளியுள்ள ஆலயங்களுள் சைவத் திருமுறைகளில் பாடல் பெற்ற தலங்கள் 274. இத்திருக்கோயில் காவிரி நதி பாயும் திருச்சிராப்பள்ளி மாநகரின் மத்தியில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. இத்திருத்தல ஈசனான தாயுமானவரை அப்பர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் பாடிச் சிறப்பித்துள்ளனர். இத்திருக்கோயில் அம்பாளின் பெயர் மட்டுவார் குழலம்மை .இத்திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயிலாகும்.இந்து மத நம்பிக்கையின் படி ஒரு முறை ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் இடையே யார் வலிமை வாய்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மகாமேருமலையை தனது உடலால் சுற்றி கொண்டு தனது பிடியிலிருந்து மலையை விடுவிக்க வாயுபகவானிடம் சவால் விடுத்தார். மேற்படி இருவருக்கும் நடந்த சண்டையின் போது மகாமேருமலையின் மூன்று துண்டுகள் மூன்று இடங்களில் விழுந்ததாக கருதப்படுகிறது. அவற்றுள் ஒன்று திருச்சிரா...